ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா' மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உட்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், உறவுகள், உடைமைகளை இழந்து, எஞ்சிய உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.