உயிரை குடிக்கும் தீவிர தாகத்தை.. இரைப்பையை தின்று தீர்க்கும் அகோர பசியை.. அனுபவித்திருக்கிறீர்களா? பாதத்தை பொசுக்கும் தீ பாதையில் கால் கடுக்க நடந்திருக்கிறீர்களா ? உடம்பே சூரியனாக தகிக்கும் உக்கிர அனுபவம் உண்டா?.. இந்த கேள்விகளுக்கு ‘இல்லை’ என்பவர்கள் ‘கூழாங்கல்லை’ பார்க்கும்போது நிஜத்துக்கு நெருக்கமாக நின்று அதனை பார்க்கலாம். ‘ம்..’ என்பவர்கள் இன்னொருமுறை அதனை அனுபவிக்கலாம்.