தறிக்கெட்டு ஓடும் ஆம்னி பேருந்துகளின் வேகத்தைப்போல, தொடர் விடுமுறை வந்துவிட்டாலே பேருந்துக் கட்டணமும் மின்னல் வேகத்தில் எகிறிவிடுகிறது. முன்பெல்லாம் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பல தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து, அநியாயக் கட்டண வசூலில் ஈடுபட்டன. இப்போது அந்தத் தலைவலியே இல்லை. ‘கட்டணக் கொள்ளையைச் சரிசெய்கிறோம்’ என்கிற பெயரில், அரசாங்கமே கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு முழுச் சலுகையும் அளித்திருக்கிறது. ‘ஐயா அங்குச்சாமி நீ மகராசனா இருக்கணும்யா...’ என அரசுக்குக் கும்பிடு போட்டுவிட்டு, பகல் கொள்ளையைப் பட்டவர்த்தனமாக அரங்கேற்றுகின்றன பெரும்பாலான ஆம்னி பேருந்துகள்!